மூணாறு, ஜன. 9: மூணாறில் துவங்கியிருக்கும் குளிர்கால திருவிழாவை முன்னிட்டு மூணாறை தூய்மை படுத்தும் பணி நடைபெற்றது. இதில் தேவிகுளம் எம்.எல்.ஏ.ராஜேந்திரன் மற்றும் மாணவ மாணவிகள் நகரை தூய்மைப்படுத்தினர்.
மூணாறில் வரும் ஜன.10ம் தேதி முதல் குளிர்கால திருவிழா துவங்கப்படவுள்ளது. இந்நிலையில் மூணாறை தூய்மைப்படுத்தும் பணி நேற்று நடைபெற்றது. அதிகாலை 5.30 மணிக்கு துவங்கிய தூய்மை பணியில் தேவிகுளம் எம்.எல்.எ எஸ்.ராஜேந்திரன், பஞ்சாயத்து தலைவர் கருப்பசாமி, தேவிகுளம் துணை ஆட்சியர் பிரேம் கிருஷ்ணன், கே.டி.ஹச்.பி. நிறுவன ஊழியர்கள் மற்றும் மாணவ, மாணவிகள் பொதுமக்கள் கலந்து கொண்டு தூய்மை பணியில் ஈடுபட்டனர்.