நாகை, ஜன.9: நாகை பாரதிதாசன் உறுப்பு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மத்திய அரசின் நேருயுவகேந்திரா சார்பில் மாணவர்களுக்கான யூத் கிளப் வளர்ச்சி என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடந்தது. வணிகவியல் துறைத்தலைவர் ரஜினிகாந்த் வரவேற்றார். முதல்வர் ஜெயராஜ் தலைமை வகித்தார். நேரு யுவகேந்திரா மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பாரத் நேருயுவகேந்திராவின் நோக்கம் மற்றும் அதன் வளர்ச்சி, மாணவ, மாணவிகளுக்கு நேரு யுவகேந்திரா சார்பில் ஆற்றும் பணிகள் ஆகியவை குறித்து பேசினார். சமூக சுகாதார நிறுவன செயலாளர் ஜெகதீஸ்வரி, நாகை தர்மாம்பாள் பெண்கள் கல்லூரி பேராசிரியர் புனிதலட்சுமி, ஒரத்தநாடு அரசு கலை அறிவியல் கல்லூரி பேராசிரியர் கலைச்செல்வி, நாகை பாரதிதாசன் உறுப்பு கலை மற்றும் அறிவியல் கல்லூரி பேராசிரியர் சந்தானலட்சுமி ஆகியோர் பேசினர். நேஷனல் சேவா ஆர்வலர்கள் பவித்ரா, பரமேஸ்வரி ஆகியோர் கருத்தரங்கிற்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர். நேஷனல் சேவா ஆர்வளர் சண்முகபிரியா நன்றி கூறினார்.