சீர்காழி ஒன்றியத்தில் அதிகளவில் 20 இடங்களில் பெண் ஊராட்சி மன்ற தலைவர்கள்

சீர்காழி, ஜன.9: சீர்காழி ஒன்றியத்தில் 37 ஊராட்சி தலைவர் பதவி இடங்களில் பெண் வேட்பாளர்கள் 20 இடங்களில் வெற்றிபெற்றுள்ளனர். நாகை மாவட்டம் சீர்காழி ஒன்றியத்தில் 37 ஊராட்சிகள் உள்ளன. இந்த ஊராட்சிகளில் ஆதி திராவிடர் பெண் 7, ஆதிதிராவிடர் பொது 7, பொது பெண் 12, பொது 11 என ஊராட்சி தலைவர் பதவிஇடங்கள் ஒதுக்கப்பட்டன. இந்த நிலையில் 20 ஊராட்சிகளில் பெண் வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர். 17 ஆண் வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர். இட ஒதுக்கீடு அடிப்படையில் 19 ஊராட்சி மன்ற தலைவர் பதவிகளை பெண்கள் பிடிக்க வேண்டும். ஆனால் ஒரு ஊராட்சி தலைவர் பதவியை கூடுதலாக பிடித்து 20 ஊராட்சிமன்ற தலைவர் பதவிகளை பெண்கள் பிடித்துள்ளனர். என்பது குறிப்பிடத்தக்கது. உள்ளாட்சி தேர்தலில் பெண்கள் அதிக அளவில் போட்டியிட்டு அதிக பதவிகளை பிடித்துள்ளனர்.

Related Stories: