மயிலாடுதுறை, ஜன.9: தொழிற்சங்கங்களின் அகில இந்திய வேலை நிறுத்தத்திற்கு ஆதரவு தெரிவித்து தமிழ்நாடு ஓய்வுபெற்ற அரசு ஊழியர் சங்கத்தினர் மயிலாடுதுறை வட்டாட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் ராமானுஜம் தலைமை வகித்தார். சாமிகணேசன், ஞானசேகரன், ஊமைத்துரை, ராமகிருஷ்ணன், கோவிந்தராஜன், திருவேங்கடம், கமலக்கண்ணன உட்பட பலர் கலந்துகொண்டு உரையாற்றினர். அகில இந்திய வேலை நிறுத்தத்தை ஆதரித்துப் பேசிய சங்கத்தினர், தங்களது நீண்டகால கோரிக்கையான குறைந்தபட்ச தேசிய மாத ஊதியமாக ரூ.21 ஆயிரம் என நிர்ணயம் செய்யவேண்டும். புதிய ஓய்வூதிய திட்டத்தை உடனடியாக நிறுத்த வேண்டும். வேளாண் விளைபொருட்களுக்கு லாபகரமான விலையை நிர்ணயம் செய்யவேண்டும்.