பயணிகள் கோரிக்கை பொன்னமராவதி அருகே கிணற்றில் விழுந்த பசுமாடு உயிருடன் மீட்பு

பொன்னமராவதி, ஜன.9: பொன்னமராவதி அருகே 50 அடி ஆழமுள்ள கிண்றில் விழுந்த பசும்மாட்டை தீயணைப்புத்துறையினர் உயிருடன் மீட்டுள்ளனர். பொன்னமராவதி தீயணைப்பு மற்றும் மீட்புப் பணி நிலைய எல்லைக்குட்பட்ட நகரப்பட்டி என்ற கிராமத்தை சேர்ந்தவர் பழனிச்சாமி, விவசாயி. இவரது பசுமாடு மேய்ந்து கொண்ருந்த போது தடுமாறி கிணற்றில் விழுந்துள்ளது. இதனைப் பார்த்ததும் அருகிலிருந்தவர்கள் பொன்னமராவதி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். சுமார் 50 அடி ஆழமுள்ள தண்ணீர் இல்லாத கிணற்றில் விழுந்த பசுமாட்டை தீயணைப்பு வீரர்கள் கயிற்றின் மூலம் கிணற்றுக்குள் இறங்கி உயிருடன் மீட்டு உரிமையாளரிடம் ஒப்படைத்துள்ளனர்.

Related Stories: