ரயில் மோதி வாலிபர் பலி

ஈரோடு, ஜன.9: ஈரோடு அடுத்த காவிரி ரயில்வே ஸ்டேஷனுக்கும், ஆனங்கூர் ரயில்வே ஸ்டேஷனுக்கும் இடைப்பட்ட தண்டவாள பகுதியில் வாலிபர் ஒருவர் ரயிலில் அடிபட்டு இறந்து கிடப்பதாக ரயில்வே போலீசாருக்கு நேற்று முன்தினம் தகவல் கிடைத்தது.சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், இறந்து கிடந்தவரின் உடலை மீட்டு விசாரணை நடத்தினர். இதில், நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் புளியங்காடு பகுதியை சேர்ந்த தங்கமணி மகன் கணேசன்(32) என்பதும், தண்டவாளத்தை கவனக்குறைவாக கடக்க முயன்றபோது ரயில் மோதி இறந்திருப்பதும் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது. இதுகுறித்து ஈரோடு ரயில்வே போலீசார் விசாரிகின்றனர்.

Related Stories: