வேலூர், டிச.9: வேலூர் மாநகராட்சி 1வது மண்டலத்தில் 80 கிலோ தடை செய்யப்பட்ட குட்கா மண்ணில் புதைத்து அழித்தனர். காட்பாடி ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் நேற்று முன்தினம் சேலத்தில் இருந்து சென்னை சென்ற ரயிலில் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, ரயில் பெட்டியில் கேட்பாரற்ற நிலையில் 2 பைகள் இருப்பது தெரிய வந்தது. அதனை சோதனையிட்டபோது, அதில் தடைசெய்யப்பட்ட குட்கா கடத்தி வருவது தெரிய வந்தது. இதையடுத்து அதிலிருந்த 40 கிலோ குட்காவை போலீசார் பறிமுதல் செய்தனர். அதனை 1வது மண்டல சுகாதார அலுவலர் பாலமுரளியிடம் ஒப்படைத்தனர். அதேபோல கடந்த சில நாட்களுக்கு முன்பு பறிமுதல் செய்த 40 கிலோ என்று மொத்தம் 80 குட்கா பறிமுதல் செய்யப்பட்டது.