நாசரேத்,ஜன.9: நாசரேத் அருகே உள்ள மணிநகர் பிரசன்ன ஆலய 51வது பிரதிஷ்டை மற்றும் 36வது அசன பண்டிகை நிகழ்ச்சி 7 நாட்கள் நடந்தது.
முதல் 3 நாட்கள் ஆலய வளாகத்தில் கன்வென்ஷன் கூட்டம் நடந்தது. சென்னை குருவானவர் ஜெய்ஹர் தாமஸ் தேவசெய்தி கொடுத்தார். 4வது நாள் மாலை 5 மணிக்கு ஆயத்த ஆராதனை நடந்தது. தூய யோவான் பேராலய உதவிகுரு இஸ்ரவேல் ஞானராஜ் தேவசெய்தி கொடுத்தார். இரவு 7 மணிக்கு பார்வையற்றோர் இன்னிசை நிகழ்ச்சி நடந்தது. 5வது நாள் காலை 5 மணிக்கு ஆலய பிரதிஷ்டை பண்டிகை ஆராதனை, திருவிருந்து ஆராதனை நடந்தது. தூய யோவான் பேராலய தலைமை குரு எட்வின் ஜெபராஜ் தேவ செய்தி கொடுத்தார். அன்று மாலை 5 மணிக்கு ஞானஸ்நான ஆராதனை நடந்தது.