சூலூர், ஜன.8: லூரில் ஆட்டோ டிரைவர் மீது கொலை வெறித் தாக்குதல் நடத்தியவர்களை கைது செய்யக் கோரி அவரது உறவினர்கள் சாலை மறியல் செய்யதனர். சூலூர் அருகே பள்ளபாளையம் பாரதி நகர் பகுதியைச் சேர்ந்தவர் செந்தில் குமார். கூட்ஸ் ஆட்டோ வைத்து ஓட்டி வருகிறார். புத்தாண்டு தினத்தன்று பாரதி நகர் பகுதியில் செந்தில்குமார் ஆட்டோ ஓட்டிச் சென்றார். அப்போது எதிரில் வந்த அதே பகுதியை சேர்ந்தவருடைய கார் மீது ஆட்டோ உரசியதாக தெரிகிறது. அப்போது இருவரும் பேசி சமாதானமாக சென்றனர். இந்நிலையில், நேற்று முன்தினம் பள்ளபாளையத்தைச் சேர்ந்த அந்த நபர், செந்தில் குமாருக்கு போன் செய்து ஆட்டோ வாடகைக்கு வேண்டும் எனக்கூறி பீடம்பள்ளிக்கு வரவைத்துள்ளார். அங்கு வந்த செந்தில்குமாரை, காரில் மறைந்திருந்த 4 பேர் ஒரு குழியில் தள்ளி சரமாரியாக தாக்கினர். இதில் மயக்கமடைந்த செந்தில்குமார் இறந்து விட்டதாக நினைத்து அந்த 4 பேரும் அவர்கள் வந்த காரில் ஏற்றி பள்ளபாளையத்தில் உள்ள குளம் அருகே வீசிச் சென்றுள்ளனர். இதற்கிடையே அந்த வழியாகச் சென்றவர்கள் சிலர் செந்தில்குமார் மயங்கி கிடந்துள்ளதை பார்த்துள்ளனர். பின் அவரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு செந்தில்குமார் சிகிச்சை பெற்று வருகிறார்.