காரைக்குடி பள்ளியில் பாராட்டு விழா

காரைக்குடி, ஜன. 8:  காரைக்குடி பாரதி நகர்மன்ற நடுநிலைப்பள்ளியில் அறநிலையத்துறை சார்பில் முத்துமாரியம்மன் கோயில் மற்றும் கொப்புடைய நாயகி அம்மன் கோயீலில் நடந்த பாவை விழாவில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பாராட்டு விழா நடந்தது. தமிழாசிரியர் வனிதா வரவேற்றார். தலைமை ஆசிரியர் மலர்விழி தலைமை வகித்தார். நிகழ்ச்சியில் பாவை விழாவில் ஒப்புவித்தல், கட்டுரை போட்டியில் வெற்றி பெற்ற கவுசிகா, சரண்யா, மணிமேகலை, ரித்திகா ஆகியோரை பாராட்டி சான்று மற்றும் பரிசு வழங்கப்பட்டது. இதில் ஆசிரியர்கள் ஹெலன், சீதாலட்சுமி, மங்களநிர்மலா, அருள்மேரி, பிரேமலதா, கலையரசி, மணிமேகலை உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: