காளையார்கோவிலில் உள்ளாட்சி தேர்தலில் வென்றவர்கள் பதவியேற்பு

காளையார்கோவில், ஜன.7: காளையார்கோவிலில் ஒன்றியக்குழு உறுப்பினர்கள், ஊராட்சிமன்ற தலைவர்கள், வார்டு உறுப்பினர்கள் பதவியேற்பு நிகழச்சி நடைபெற்றது. காளையார்கோவில் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நேற்று காலை ஒன்றியக்குழு உறுப்பினர்கள் பதவியேற்பு விழா நடைபெற்றது. இவ்விழாவிற்கு ஒன்றிய தேர்தல் நடத்தும் அலுவலர் ரோஜா தலைமை தாங்கினார். வட்டார வளர்ச்சி அலுவலர் உமாமகேஸ்வரி, இளங்கோ, துணை வட்டார வளர்ச்சி அலுவலர் பாலசந்திரபட் மற்றும் அலுவலக பணியாளர்கள் தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் 19 ஒன்றியத்தில் வெற்றிபெற்ற வேட்பாளர்கள் உறுதிமொழியெடுத்த பின் பதவியேற்றனர். இதேபோல் 43 பஞ்சாயத்திலும் அந்தந்த ஊர்களில் உள்ள பஞ்சாயத்து அலுவலகங்களில் தேர்தல் நடத்திய அதிகாரி முன்னிலையில் ஊராட்சிமன்ற தலைவர் பதவிக்கு வெற்றி பெற்றவர்கள், வார்டு உறுப்பினர் பதவிக்கு வெற்றிபெற்றவர்களுக்கு பதவியேற்பு விழா நடைபெற்றது.

Related Stories: