தென்திருப்பதியில் சொர்க்கவாசல் திறப்பு

காரைக்குடி, ஜன. 7: காரைக்குடி அருகே, அரியக்குடி திருவேங்கடமுடையான் திருக்கோயிலில் நேற்று காலை சொர்க்கவாசல் திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. காலை 5.30 மணிக்கு திருவேங்கடமுடையான் உடனுறை தாயார் சிறப்பு அலங்காரத்தில் சொர்க்கவாசல் கதவுகளை திறந்து, பக்தர்களுக்கு காட்சியளித்தார். இதையொட்டி அதிகாலை முதலே ஏராளமான பக்தர்கள் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். காரைக்குடி தெற்கு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். காரைக்குடி போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பேருந்து எற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சிவகங்கை சுந்தரராஜ பெருமாள் தேவி, பூதேவியுடன் சுந்தரராஜ பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்தார்.

Related Stories: