கொள்ளிடம் அருகே குளத்தில் மூழ்கி விவசாயி பலி

கொள்ளிடம், டிச.30: நாகை மாவட்டம் கொள்ளிடம் அருகே பச்சைபெருமாள்நல்லூர் ஊராட்சி மத்தலமுடையான் கிராமம் வடக்குத்தெருவைச் சேர்ந்த பன்னீர்செல்வம் (56), விவசாயி. நேற்று மாலை தனது வீட்டிற்கு அருகாமையில் உள்ள சொந்த வயலில் வேலைகளை முடித்து விட்டு வயலை ஒட்டியுள்ள லிங்கச்செட்டி குளத்தில் குளித்துக்கொண்டிருந்தார். அப்போது நீச்சல் தெரியாததால் ஆழமான பகுதியில் மூழ்கினார். இது குறித்து தகவலறிந்த சீர்காழி தீயணைப்பு அலுவலர் ஜோதி தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்து நீண்ட நேரம் தேடி பன்னீர்செல்வத்தின் உடலை கண்டுபிடித்து கரைக்கு கொண்டுவந்தனர். புதுப்பட்டினம் போலீசார், வி.ஏ.ஓ அருண்பிரகாஷ் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து பன்னீர்செல்வத்தின் உடலை கைப்பற்றி சீர்காழி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இவருக்கு மனைவி ரேவதி(50) மற்றும் மூன்று மகன்களும், ஒரு மகளும் உள்ளனர்.

Related Stories: