அரியலூர், டிச. 30: அரியலூர் மாவட்டத்தில் 2ம் கட்டமாக இன்று உள்ளாட்சி தேர்தல் நடப்பதையொட்டி வாக்குச்சாவடிகளில் அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளதா என்று கலெக்டர் ரத்னா ஆய்வு செய்தார். அரியலூர் மாவட்டத்தில் தா.பழூர், ஜெயங்கொண்டம், ஆண்டிமடம் ஆகிய ஒன்றியங்களில் இரண்டாம் கட்டமாக ஊரக உள்ளாட்சி தேர்தல் இன்று நடக்கிறது. இந்நிலையில் தா.பழூர் ஒன்றியம் மணகெதி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மற்றும் ஜெயங்கொண்டம் த.கைகளத்தெரு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடி மையங்களில் அடிப்படை வசதிகள் உள்ளதா என்று கலெக்டர் ரத்னா நேற்று ஆய்வு செய்தார்.