இலுப்பூர் காளிகா பரமேஸ்வரி கோயிலில் மண்டலாபிஷேகம்

இலுப்பூர்,டிச.30: இலுப்பூர் மகா கணபதி காளிகா பரமேஸ்வரிஅம்மன் கோயிலில் 48 நாள் மண்டலாபிஷேகம் நேற்று நடைபெற்றது. இலுப்பூர் கண்ணாரத்ெதருவில் காளிகாபரமேஸ்வரி கோயில் உள்ளது. இக்கோயிலின் கும்பாபிஷேகம் 12 ஆண்டுகள் நிறைவுற்றதையடுத்து இக்கோயிலை புனரமைத்து கும்பாபிஷேகம் நடத்த விஸ்வகர்மா சங்கத்தினர் முடிவெடுத்து அதன் பணிகள் நிறைவுற்ற நிலையில் இக்கோயிலின் கும்பாபிஷேகம் கடந்த நவம்பர் மாதம் 11ம் தேதி நடைபெற்றது. இதையடுத்து தினமும் மண்டகப்படிகாரர்களால் சிறப்பு பூஜைகள் நடை பெற்று வந்தன. மண்டலாபிஷேகத்தின் நிறைவு நாளான நேற்று 48வது நாள் மண்லாபிஷேகம் நடைபெற்றது. இதையொட்டி கோயில் யாக சாலை அமைக்கப்பட்டு கடம் ஸ்தாபிதம் செய்து சிறப்பு ஹோமங்கள் நடைபெற்றது. பின்னர் அம்மனுக்கு அபிஷேகங்கள் மற்றும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.

Related Stories: