தொழிலாளியை தாக்கியவர் கைது

சாத்தான்குளம், டிச. 30:  சாத்தான்குளம் அடுத்த பண்டாரபுரத்தை சேர்ந்தவர் பால்ராஜ் (45). கேரளாவில் மிட்டாய் கடையில் வேலை பார்த்து வரும் இவர், நேற்று முன்தினம் ஊருக்கு வந்திருந்தார். பின்னர் இவரும், பண்டாரபுரத்தைச் சேர்ந்த தனது நண்பரான ஜெயபாண்டி (47) என்பவரும் மது அருந்தினர். பின்னர்  ஏற்பட்ட வாக்குவாதத்தில் ஆத்திரமடைந்த ஜெயபாண்டி , பால்ராஜை கல்லால் தாக்கினார். இதில் காயமடைந்த பால்ராஜ் சாத்தான்குளம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சாத்தான்குளம் எஸ்.ஐ பாலகிருஷ்ணன் ஜெயபாண்டியை கைது செய்தார்.

Related Stories: