கயத்தாறு, டிச. 29: கயத்தாறு அருகே சாக்கு பையில் பதுக்கிவைத்து மது பானம் விற்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் 2ம் கட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு போலீசார் தீவிர கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர். அந்த வகையில் கயத்தாறு இன்ஸ்பெக்டர் ஆவுடையப்பன் தலைமையில் போலீசார் கயத்தாறு அருகே செட்டிகுறிச்சியில் இருந்து மஞ்சநம்பிகிணறு செல்லும் சாலையில் ரோந்து சென்றனர். இதில் அங்குள்ள காட்டுப் பகுதியில் செட்டிகுறிச்சி மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த கருப்பசாமி மகன் வெயிலிமுத்து (41) என்பவர் சட்டவிரோதமாக பதுக்கிவைத்து மது விற்றது தெரியவந்தது. இதையடுத்து அவரை கைதுசெய்த போலீசார், அவரிடம் 3 சாக்கு பைகளில் இருப்பு வைக்கப்பட்டிருந்த 180 மில்லி கொண்ட 210 மது பாட்டில்களை கைப்பற்றினர்.