இலுப்பூர், டிச.29: அன்னவாசல் ஒன்றியத்தில் 2 மாவட்ட கவுன்சிலர், 20 ஒன்றிய கவுன்சிலர், 42 ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் 244 ஊராட்சி வார்டு உறுப்பினர்களுக்காக தேர்தல் நேற்று முன்தினம் நடைபெற்றது. 203 வாக்குச் சாவடி மையங்களில் நடைபெற்ற இந்த வாக்கு பெட்டிகள் பலத்த பாதுகாப்புடன் வாக்கு என்னும் மையமான இலுப்பூரில் உள்ள ஆர்.சி மேல்நிலைப்பள்ளிக்கு விடிய விடிய கொண்டு வரப்பட்டது. பள்ளி வாளாகம் முழுவதும் போலீசாரின் தீவிர கண்காணிப்பின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது. பள்ளியில் சுற்று சுவருக்கு மேல் 10 அடி உயரத்தில் இரும்பு தகரங்கள் அமைத்து வாக்கு எண்ணிக்கை நடைபெறும் போது வெளியில் உள்ளவர்களுக்கு எந்தவிதமான தகவல்களும் சென்று விடக்கூடாது என்பதற்காக பாதுகாப்பிற்காக உயரமான தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளது.