நாகர்கோவில், டிச.27: குமரி மாவட்டத்தில் இரவு 10 மணிக்கு மேல் ஒலி பெருக்கி வைத்து கிறிஸ்துஸ் விழா கொண்டாடியது தொடர்பாக போதகர்கள் உள்ளிட்டோர் மீது வழக்குகள் பதிவுசெய்து செய்யப்பட்டுள்ளது. குமரி மாவட்டம் முழுவதும் கிறிஸ்துமஸ் விழா கொண்டாட்டங்கள் நடைபெற்றன. கிறிஸ்துஸ் விழா ஊர்வலங்கள், குடில்கள் அமைத்தும் விழாக்கள் நடைபெற்றன. தற்போதும் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் அமைக்கப்பட்டுள்ள குடில்களை காண ஏராளமான மக்கள் வந்து செல்கின்றனர். தக்கலை அருகே வட்டம் பெரியநாயகி சர்ச் பகுதியில் நீதிமன்ற உத்தரவை மீறி இரவு 2.30 மணி வரை அதிகமான எண்ணிக்கையில் ஒலி பெருக்கிகள் வைத்து அளவுக்கு அதிகமான சத்தம் ஏற்படுத்தி பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தியதாக தக்கலை சப் இன்ஸ்பெக்டர் சிதம்பரதாணு அளித்த புகாரின் பேரில் தக்கலை போலீசார் வட்டம், பெரியநாயகி சர்ச் போதகர்கள் ஜெலஸ்டின் ஜெரால்டு, சகாய ஸ்டாலின் பாபு உள்ளிட்டோர் மீது வழக்குபதிவு செய்துள்ளனர்.