சூலூர் அருகே டிரான்ஸ்பார்மர் மீது லாரி மோதி டிரைவர் பலி

சூலூர், டிச.27:சூலூர் அருகே டிரான்ஸ்பார்மர் மீது லாரி மோதிய விபத்தில் டிரைவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். தரம்புரி மாவட்டத்தைச் சேர்ந்த மாரிமுத்து என்பவர் மகன் முத்து கிருஷ்ணன் (42). இவருக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர். இவர், காடம்பாடி பகுதியைச் சேர்ந்த வெங்கடேஷ் என்பவரிடம்  டிப்பர் லாரி டிரைவராக வேலை செய்து வந்தார்.இந் நிலையில், நேற்று காலை காரணம்பேட்டையில் இருந்து லாரியில் ஜல்லிக்கற்களை ஏற்றிக் கொண்டு நீலாம்பூரில் இறக்கிவிட்டு முத்துக்கவுண்டன் புதூர் வழியாக சூலூர் நோக்கி வந்து கொண்டிருந்தார். அப்போது, சூலூர் ரயில் நிலையம் அருகே வந்த போது லாரி, கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் இருந்த டிரான்ஸ்பார்மர் மீது மோதியது. இந்த விபத்தில் லாரி டிரைவர் முத்துகிருஷ்ணன் சம்பவ இடத்திலேயே இறந்தார். அக்கம் பக்கத்தினர் மின்வாரியத்துக்கும், சூலூர் போலீசாருக்கும் தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்துக்கு மின் ஊழியர்கள் டிரான்ஸ்பார்மரின் மின் இணைப்பை துண்டித்தனர். இதுகுறித்து சூலூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

Related Stories: