காரைக்குடி, டிச.18: காரைக்குடியில் டெய்லர் படுகொலை செய்யப்பட்டது பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். காரைக்குடி செஞ்சை புளியமரத்தடி பகுதியில் தையல் கடை வைத்துள்ளவர் செல்வராஜ் (50). இவருக்கு திருமணமாகி மனைவி சின்னபொண்ணு மற்றும் ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். செல்வராஜ் குடும்பத்தினருடன் பேச்சுவார்த்தை இல்லாமல் தனியாக வசித்து வந்ததாக தெரிகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு 10 மணிக்கு வீட்டை விட்டு வெளியே சென்ற செல்வராஜ் நேற்று காலை பழைய செஞ்சை காட்டம்மன் கோவில் அருகில் கழுத்து அறுக்கப்பட்டு இறந்து கிடந்தார்.