விருதுநகர், டிச.17: விருதுநகர் பழைய பஸ் நிலையம் முன்பகுதியில் பொதுக்கழிப்பிடம் கட்ட சிபிஎம் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்து ஆணையரிடம் புகார் மனு அளித்தனர்.விருதுநகர் நகராட்சி ஆணையர் பார்த்தசாரதியிடம் சிபிஎம் நகர செயலாளர் முருகன் தலைமையில் அளித்த மனுவில், விருதுநகர் நகராட்சி சார்பில் பழைய பஸ் நிலையம் முன்புறம் அண்ணா சிலை அருகில் பொதுக்கழிப்பிடம் கட்ட இருப்பதாக தெரிகிறது.