திருமயம்,டிச.16:அரிமளம் அரசு மருத்துவமனை வளாகத்தில் 2 மாதங்களாக எரியாமல் உள்ள உயர் கோபுர மின் விளக்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.புதுக்கோட்டை மாவட்டம் அரிமளம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சுற்றுவட்டார பகுதியில் இருந்து தினந்தோறும் இரவு பகல் பாராமல் 100க்கும் மேற்பட்ட மக்கள் வந்து செல்கின்றனர். இந்நிலையில் இரவு நேரங்களில் மருத்துவ வளாகம் கும்மிருட்டாக இருப்பதால் நோயாளிகள், பொதுமக்கள் மிகுந்த சிரமம் அடைந்து வந்தனர். இதனை கருத்தில் கொண்டு 10 மாதங்களுக்கு முன்னர் மருத்துவமனை வளாகத்தில் உயர் கோபுரமின் விளக்கு நிறுவப்பட்டது.