வேதாரண்யம், டிச.13: நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் பள்ளி மாணவர்களுக்கு சர்ச்சைக்குரிய வகையிலான சிகைஅலங்காரத்தை தவிர்க்க வலியுறுத்தி ஆசிரியர் சித்திரவேலு பிரசாரம் மேற்கொண்டார். இந்நிலையில், முறைப்படுத்தப்பட்ட சிகை அலங்காரம் செய்வதென முடித்திருத்தும் தொழிலாளர்கள் அறிவித்துள்ளனர். வேதாரண்யம் தாலுக்காஆதனூர் ஞானம்பாள் தொடக்கப் பள்ளிஆசிரியர் சித்ரவேலு. இவர் மாணவர்களுக்கு புதிய வடிவங்கள் என்ற பெயரில் சர்ச்சைக்குரிய முறையில் முடி திருத்தம் செய்வதால் ஏற்படும் பிரச்னைகளை விளக்கியும், அந்த முறையை கைவிடவும் வலியுத்தி பிரசாரம் செய்தார். இவர் நவம்பர் 23ம் தேதி பிரசாரத்தை தொடங்கி முடிதிருத்தும் தொழிலாளர்களை நேரில் சந்தித்து பிரசாரம் செய்தார். 15 நாட்களில் 179 கடைகளில் இருந்த தொழிலாளர்களையும், அதன் உரிமையாளர்களையும் சந்தித்தார்.