திருத்துறைப்பூண்டி, டிச.12:முத்துப்பேட்டை சாலையில் தாழ்வாக தொங்கும் மின்கம்பியை உயர்த்தி கட்ட கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. திருத்துறைப்பூண்டி நகராட்சி முத்துப்பேட்டை சாலையில் அமைந்துள்ள அம்பேத்கார் சிலை திருவாரூர் மாவட்டத்தில் முக்கிய சிலையாகும். நாள்தோறும் மரியாதை செலுத்தும் விதமாக பல்வேறு தரப்பினர் வந்து செல்கின்றனர். அம்பேத்கார் சிலையின் கூரைப்ப குதி கடந்த கஜா புயலினால் முற்றிலும் சேதமடைந்துவிட்டது.