மன்னார்குடி, டிச. 12:மன்னார்குடி அருகே இரண்டு வீடுகளில் ஏற்பட்ட தீவிபத்தில் ரூ.2 லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேதமடைந்தது. திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே நெடுவாக்கோட்டை அம்பேத்கர் நகரில் வசிப்பவர் சத்தீஸ்வரி (21). இவர் திருவாரூர் நகராட்சி அலுவலகத்தில் இயங்கும் இ சேவை மையத்தில் வேலை பார்த்து வருகிறார். இவரது பெற்றோர் செல்வம், தமிழ்ச்செல்வி ஆகியோர் இறந்த நிலையில் யோகேஸ்வரி (19), கீர்த்திகா (18) இரண்டு சகோதரிகளுடன் குடிசை வீட்டில் வசித்து வந்தார். இந்நிலையில் சத்தீஸ்வரி நேற்று முன்தினம் இரவு தனது இரு சகோதரி களுடன் அருகில் உள்ள உறவினர் வீட்டில் பேசிக்கொண்டிருந்தார். அப்போது அவரது குடிசை வீடு திடீரென தீப்பிடித்தது. இதனை கண்ட அருகில் இருந்த வர்கள் தீயை அணைக்க முயன்றனர். தீ மளமளவென்று கொழுந்து விட்டு எரிந்ததில் அருகில் இருந்த ராஜேந்திரன் (40) என்பவருக்கு சொந்தமான வீட்டி ற்கும் தீ பரவியது.