தற்போது நிலவி வரும் மழைப்பொழிவின் காரணமாக காற்றின் ஈரம் 90 சதவீதம் முதல் 97 சதவீதம் உள்ளதால் இலைசுருட்டு புழு தாக்கும் வாய்ப்பு அதிகம் உள்ளது. இதன் அறிகுறிகள் நெற்பயிர் இலைகள் நீளவாக்கில் மடிக்கப்பட்டிருக்கும். புழுக்கள் இலைகளின் பச்சை நிற திசுக்களை சுரண்டுவதால் இலைகள் வெண்மையாக மாறி காய்ந்துவிடும். தீவிர தாக்குதலின்போது முழு நெல் வயலும் வெண்மையான நிறத்தில் காய்ந்தது போல் காட்சியளிக்கும். இலைசுருட்டு புழுவை கட்டுப்படுத்த விவசாயிகள் ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மை தொழில் நுட்பத்தை விவசாயிகள் பின்பற்ற வேண்டும். தழைச்சத்து உரமான யூரியா மற்றும் அம்மோனியா சல்பேட் உரங்களை அதிகமாக இடுவதை தவிர்க்க வேண்டும். டிரைக்கோகிரேம்மா கிரேனிஸ் (முட்டை ஒட்டுண்ணிகளை) பயிர் நடவு செய்து 37, 44 மற்றும் 51 நாட்களில் மொத்தம் மூன்று முறை 5சிசி (1 லட்சம் முட்டை ஒட்டுண்ணிகள் )என்ற அளவில் ஒரு ஹெக்டேருக்கு விட வேண்டும்.