சீர்காழி, டிச.11: சீர்காழி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் செய்ய 9 தேதி முதல் மனுக்கள் பெறப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.சீர்காழி ஒன்றியத்தில் மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் பதவிக்கு 3, 4 ஆகிய இரண்டு வார்டுகள் உள்ளன. இந்த வார்டுகளுக்கு இரண்டாவது நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லை. இதேபோல் ஒன்றிய குழு உறுப்பினர்களுக்கு 21 வார்டுகள் உள்ளன. இந்த வார்டுகளுக்கு இரண்டாவது நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லை. இதேபோல் 37 ஊராட்சிகள் உள்ளன. இந்த ஊராட்சிகளில் இரண்டாவது நாளாக மொத்தம் மூன்று பேர் மட்டும் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர்.