விருத்தாசலம்: உள்ளாட்சி தேர்தலையொட்டி அந்தந்த பகுதிகளில் வாக்கு சாவடிகள் அமைக்கப்படுகின்றன. வாக்குப்பதிவு முடிந்தவுடன் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் இடங்களை தேர்வு செய்யும் பணியில் கடலூர் மாவட்ட ஆட்சியர் நிர்வாகம் ஈடுபட்டு வருகிறது.அதன்படி விருத்தாசலம் அரசு கொளஞ்சியப்பர் கலைக் கல்லூரியை வாக்கு எண்ணிக்கை மையம் ஆக தேர்வு செய்யப்பட்டு அதனை ஆய்வு செய்யும் பணியில் நேற்று கடலூர் மாவட்ட ஆட்சியர் அன்புச்செல்வன் ஈடுபட்டார். பின்னர் அவர் கூறுகையில், தேர்தல் நடத்துவதற்கான அனைத்து வாக்குப்பெட்டிகள் மற்றும் தேர்தல் நடத்துவதற்கான 21 ஆயிரம் பணியாளர்கள் தயார் நிலையில் உள்ளனர். அவர்களுக்கு மூன்று கட்டமாக பயிற்சி வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. தேர்தல் முடிந்ததும், வாக்கு எண்ணிக்கை நடைபெறுவதற்கு 14 மையங்களை தேர்வு செய்துள்ளோம். அதன்படி விருத்தாசலம் கொளஞ்சியப்பர் கலைக் கல்லூரியை தேர்வு செய்து ஆய்வு செய்து வருகிறோம். தேர்தலில் பொதுமக்கள் அனைவரும் ஜனநாயக கடமையை ஆற்ற வேண்டும். பண்ருட்டி அருகே நடுக்குப்பம் என்ற பகுதியில் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு ஏலம் எடுக்கப்பட்டதாகவும், அதற்கு ஒரு நபர் பணம் கட்டியதாகவும் கூறு கிறார்கள்.