கம்பம், டிச. 10: நீரினைப் பயன்படுத்துவோர் சங்க கூட்டம் கம்பம் கோட்டை மைதானத்தில் உள்ள பள்ளியில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு தலைவர் ஓ.ஆர்.நாராயணன் தலைமை தாங்கினார். செயலாளர் சுகுமாறன், துணைச்செயலாளர் ராமகிருஷ்ணன் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக கம்பம் எம்எல்ஏ ஜக்கையன் கலந்து கொண்டார். கூட்டத்தில் வைகை அணையில் நீர்மட்டம் முழுகொள்ளளவான 71 அடியை நெருங்கியுள்ளது, முல்லைப்பெரியாறு அணையில் 128.30 அடி தண்ணீர் மட்டுமே உள்ளதால், முல்லைப்பெரியாறு அணையில் இருந்து எடுக்கப்படும் தண்ணீரின் அளவை உடனடியாக குறைக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.