பொன்னமராவதி, டிச.10: பொன்னமராவதி அருகே கேசராபட்டியில் நடைபெற்ற கபடி போட்டியில் 46 அணிகள் கலந்து கொண்டு விளையாடினர். புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே உள்ள கேசராபட்டியில் கபடி போட்டி நடந்தது. கார்த்திகை தீப திருநாளை முன்னிட்டு கேசராபட்டியில் பிடாரி அம்மன் கபடி குழு மற்றும் ஊர் பொது மக்கள் இணைந்து நடத்திய கபடி போட்டியை நடத்தினர். இந்த போட்டிக்கு மிராஸ் பழனிச்சாமி அம்பலம் தலைமை வகித்தார். புதுக்கோட்டை, திருச்சி, சிவகங்கை, திண்டுக்கல், மதுரை ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த 46 அணி வீரர்கள் கலந்து கொண்டு விளையாடினர்.