கந்தர்வகோட்டை ஆபத்சகாயேஸ்வரர் ஆலயத்தில் கடைசி சோமவார சிறப்பு பூஜை

கந்தர்வகோட்டை, டிச.10: கந்தர்வகோட்டையில் உள்ள அமராவதி உடனுறை ஆபத்சகாயேஸ்வரர் ஆலயத்தில் கடைசி சோமவார பூஜையும், பிராதோஷ பூஜையும் சிறப்பாக நடத்தப்பட்டது. இதை முன்னிட்டு நந்திக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடத்தப்பட்டு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது. பின்னர் வந்திருந்த பக்தர்களுக்கு பொங்கல் பிரசாதமாக வழங்கப்பட்டது. நேற்று கடைசி சோமவாரமும், பிரதோஷமும் ஒரேதினத்தில் வந்தது சிறப்பு நாளாக கருதப்பட்டதால் பக்தர்கள் ஏராளமானோர் வந்து தரிசனம் செய்து சென்றனர்.

Related Stories: