காவலன் செயலி குறித்து பொதுமக்களிடம் பிரசாரம்

கந்தர்வகோட்டை, டிச.10: காவலன் செயலி குறித்து பொதுமக்களிடம் போலீசார் பிரசாரம் மேற்கொண்டனர். பெண்கள் பாதுகாப்புக்காக காவல் துறையினரால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது காவலன் செயலி. இதனால் பெண்கள் எவ்வாறு பாதுகாக்கப்படுவார்கள் என கந்தர்வகோட்டை காவல் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் பாஸ்கர் காவல் நிலையம் எதிரே காந்தி சிலை அருகே பொதுமக்களிடம் பிரசாரம் மேற்கொண்டார். காவலன் செயலியால் எவ்வாறு பெண்கள் காப்பாற்றப்படுகின்றனர் என்பதை விளக்கமாக பொதுமக்களிடம் எடுத்துரைத்தார். காவலன் செயலி மூலம் ஒரே சமயத்தில் பலருக்கு பிரச்னை குறித்து தகவல் தர முடியும் என்பது இதன் சிறப்பு அம்சமாகும்.

Related Stories: