ஒகேனக்கல் கொலை வழக்கில் தேடப்பட்ட தொழிலாளி சேலம் கோர்ட்டில் சரண்

சேலம், டிச.10: ஒகேனக்கல்லில் நடந்த கொலை வழக்கில் தேடப்பட்ட தொழிலாளி சேலம் நீதிமன்றத்தில் சரண் அடைந்தார். தர்மபுரி மாவட்டம், ஒகேனக்கல் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில், கடந்தாண்டு நடந்த கொலை வழக்கு ஒன்றில், தர்மபுரி மாவட்டம் அரூர் அருகேயுள்ள கீழ் மொரப்பூர் பறையப்பட்டியை சேர்ந்த மணிகண்டன்(33) என்பவரை போலீசார் தேடி வந்தனர். இந்நிலையில், அவர் சேலம் 6வது நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில், நீதித்துறை நடுவர் சந்தோஷ் முன்பு சரண் அடைந்தார். பின்னர் அவர் சேலம் சிறையில் அடைக்கப்பட்டார். இதே வழக்கில், கடந்த வாரம் சங்ககிரி தேவண்ணகவுண்டனூரைச் சேர்ந்த ஜெயராமன் என்பவர் சரண் அடைந்தது குறிப்பிடத்தக்கது.

Related Stories: