சிலிண்டர் வெடித்து வீடு நாசம் கொமதேக சார்பில் ₹25 ஆயிரம் நிதி உதவி

கெங்கவல்லி, டிச.10: கெங்கவல்லி அருகே கடம்பூரில் சிலிண்டர் வெடித்து குடிசை வீடு எரிந்த விபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு கொமதேக சார்பில் ₹25 ஆயிரம் நிதி உதவி வழங்கப்பட்டது.  கெங்கவல்லி அடுத்த கடம்பூர் அருகில், செல்வம் என்பவரது குடிசை வீட்டில் கடந்த சனிக்கிழமை  காஸ் கசிவு ஏற்பட்டு, 2 சிலிண்டர்கள் வெடித்தது. இதில், வீட்டிலிருந்த பணம், நகை உள்ளிட்ட அனைத்து பொருட்களும் எரிந்து நாசமானது. தீ விபத்தில் பாதிக்கப்பட்ட செல்வத்துக்கு கொமதேக மாநில இளைஞரணி செயலாளர் சூரியமூர்த்தி, ஆறுதல் கூறி ₹25 ஆயிரம் நிவாரண உதவியை வழங்கினார். அப்போது, சேலம் கிழக்கு மாவட்ட செயலாளர் ரமேஷ், மண்டல இணைச்செயலாளர் விஜயகுமார், சேகர், லோகநாதன், செந்தில், நந்தேஷ், ராஜேஷ், சக்திவேல் ஆகியோர் உடனிருந்தனர்.

Related Stories: