திருவாரூர், டிச.9:திருவாரூர் மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட இன்று மனுதாக்கல் செய்யலாம் என கலெக்டர் ஆனந்த் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.திருவாரூர் மாவட்ட தேர்தல் அலுவலரும் மாவட்ட கலெக்டருமான ஆனந்த் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல்கள் 2019 டிசம்பர் 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெறும் தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்தால் அறிவிக்கப் பட்டுள்ளது.அதன்படி, தேர்தல் அறிவிப்பு பிரசுரித்தல் மற்றும் வேட்பு மனுக்கள் தாக்கல் 9 ம் தேதி (இன்று )முதல் துவங்கி வரும் 16 ம் தேதி முடிவடைகிறது. வரும் 17 ம் தேதியன்று தாக்கல் செய்யப்பட்ட வேட்பு மனுக்கள் பரிசீலனை செய்யப்படும். வேட்பு மனுக்களை 19 ம் தேதியன்று திரும்ப பெறலாம்.முதல்கட்ட வாக்கு பதிவு டிசம்பர் 27 அன்றும் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு டிசம்பர் 30 ம் தெய்தியன்றும் நடைபெறும். வாக்கு எண்ணிக்கை ஜனவரி 2 ல் நடைபெறும். ஜனவரி 4 ல் தேர்தல் நடவடிக்கைகள் முடிவடையும். தேர்ந் தேடுக்கப்பட்ட வார்டு உறுப்பினர்கள் மற்றும் கிராம ஊராட்சி தலைவர்களின் முதல் கூட்டம் மற்றும் பதவியேற்பு ஜனவரி 6 ல் நடைபெறும்.மாவட்ட ஊராட்சி மற்றும் ஊராட்சி ஒன்றிய தலைவர், துணைத்தலைவர் மற்றும் கிராம ஊராட்சி துணைத்தலைவர் ஆகியோரை தேர்த்தேடுப்பதற்கான மறைமுக தேர்தல்கள் ஜனவரி 11 ம் தேதி நடைபெறும்.