நாகர்கோவில், டிச.4: அரபிக்கடலில் பவன் புயல் உருவாக உள்ள நிலையில் லட்சத்தீவு பகுதியில் 50 விசைப்படகுகள் பலத்த காற்றில் சிக்கியுள்ளதாக மீனவர்கள் தெரிவித்துள்ளனர். லட்சத்தீவு பகுதியில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை புயலாக வலுப்பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அரபிக்கடலில் உருவாக உள்ள இந்த புயலுக்கு ‘பவன்’ என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. புயலுக்கு பெயர் சூட்டும் வரிசையில் இம்முறை இலங்கை இந்த பெயரை சூட்டியுள்ளது. நடப்பு பருவகாலத்தில் அரபிக்கடலில் உருவாகியுள்ள 4 வது புயல் இது ஆகும். மேற்கு அரபிக்கடல் பகுதியில் தற்போது தீவிர காற்றழுத்த தாழ்வுநிலை அடுத்த 24 மணி நேரத்தில் ‘பவன்’ புயலாக மாறும் என்றும், இது சோமாலியா கடற்கரை பகுதிக்கு செல்லும் என்றும் நேற்று மாலையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே வேளையில் மற்றொரு காற்றழுத்த தாழ்வுநிலை தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாக கேரள கடல் பகுதியில் உருவாகியுள்ளது. இது வடக்கு பகுதி நோக்கி நகர்ந்து செல்ல வாய்ப்பு உள்ளது. இதனால் தமிழக, கேரள பகுதிகளுக்கு பாதிப்பு இல்லை என்றும், மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவை ஒருபுறம் இருக்க வங்க கடல் பகுதியில் வரும் வெள்ளிக்கிழமை மேலும் ஒரு காற்றழுத்த தாழ்வுநிலை உருவாகும். இது தமிழக பகுதியில் மழையை கொடுக்கும் எனவும், வானிலை மைய தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.இதற்கிடையே நாகர்கோவில் மீன்துறை உதவி இயக்குநர் மோகன்ராஜ் அனைத்து மீனவர் கூட்டுறவு சங்கம், ஆரோக்கியபுரம் முதல் நீரோடி வரையிலான மீனவ கிராமங்களை அனைத்து பங்கு தந்தையர்களுக்கு நேற்று அனுப்பிய வானிலை எச்சரிக்கை தொடர்பான அறிவிப்பில் கூறியிருப்பதாவது: