ராசிபுரத்தில் கேங்மேன் பணிக்கு ஆட்கள் தேர்வு

ராசிபுரம், டிச.3: ராசிபுரம் மின்வாரிய அலுவலகத்தில் நடந்த கேங்மேன் தேர்வில் 25 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். ராசிபுரம் அருகே, கவுண்டம்பாளையத்தில் மின்சார வாரிய செயற்பொறியாளர் அலுவலகம் உள்ளது. இதில் கேங்மேன் பதவிகளுக்கான ஆட்கள் தேர்வு முகாம் நேற்று நடந்தது. மின்வாரிய உயர் அதிகாரிகள் கலந்து கொண்டு, தகுதியான ஆட்களை தேர்வு செய்தனர். இத்தேர்வில் நாமக்கல், பரமத்திவேலூர், திருச்செங்கோடு பள்ளிபாளையம், குமாரபாளையம், சேந்தமங்கலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். காலை முதல் மாலை வரை நடைபெற்ற இந்த முகாமில் 25 பேர் தேர்வு செய்யப்பட்டனர். கேங்மேன் தேர்வுக்கு வந்திருந்த தேர்வர்களை, போலீசார் கடும் சோதனைக்கு பின்னரே உள்ளே அனுமதித்தனர்.

Related Stories: