வருசநாடு, நவ.28: கடமலை மயிலை ஒன்றியத்தில் பொது இடங்களில் மது அருந்துவோர் மீது நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கடமலை மயிலை ஊராட்சி ஒன்றியத்தில் பொது இடங்களில் மது அருந்துவோர் மதுபான பாட்டில்களை தரைகளில் உடைத்துவிட்டு செல்கின்றனர். இதனால் பொதுமக்கள் மிகவும் அவதியடைந்து வருகின்றனர். குறிப்பாக கிராமப்புறங்களில் சாலையோரம், பாலங்கள், ஓடைகள், வைகைஆறு, விவசாயநிலங்கள் போன்ற பகுதிகளில் கூட்டம் கூட்டமாக அமர்ந்து மது அருந்தி வருகின்றனர்.