லாரி மோதி தச்சு தொழிலாளி பலி

தஞ்சை, நவ. 27: லாரி மோதிய விபத்தில் தச்சு தொழிலாளி பலியானார்.தஞ்சை அருகே வல்லம் கம்மாள தெருவை சேர்ந்தவர் முருகேசன். இவரது மகன் சரண் (22). தச்சு தொழிலாளியான இவர் தஞ்சை முனிசிபல் காலனியில் ஒரு வீட்டில் வேலை பார்த்து விட்டு சாப்பிடுவதற்காக பைக்கில் வீடு நோக்கி சென்றார். மருத்துவக்கல்லூரி சாலை ஈஸ்வரி நகர் அருகே சென்றபோது பின்னால் வந்த பார்சல் லாரி, பைக் மீது மோதியது. இதில் லாரி சக்கரத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே சரண் பலியானார். இதுகுறித்து தஞ்சை நகர போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தினர்.

Related Stories: