சர்வதேச குழந்தைகள் தின விழா குளித்தலை நூலகத்தில் 60 மாணவ, மாணவிகள் உறுப்பினர்களாக சேர்ப்பு

குளித்தலை, நவ. 22: கரூர் மாவட்டம் குளித்தலை காவேரி நகரில் வாசகர் வட்ட நூலக மையம் உள்ளது. இந்த நூலகத்தில் சர்வதேச குழந்தைகள் தின விழாவையொட்டி பள்ளிக் குழந்தைகளுக்கான உறுப்பினர் சேர்க்கை மற்றும் நூலக பயன்பாடு குறித்த நேரடி பயிற்சி நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் சாய் வித்யாலயா பள்ளி தாளாளர் ரம்யா 60 பள்ளி மாணவ, மாணவிகளை புதிய நூலக உறுப்பினர்களாக சேர்த்து நூலகர் ஆனந்த கணேசனிடம் அதற்கான விண்ணப்ப படிவங்களை வழங்கினார்.

Related Stories: