தேசிய நூலக வார விழா

அறந்தாங்கி, நவ.22: அறந்தாங்கி நூலகத்தில் வார விழா மற்றும் எழுத்தாளர் நந்தகுமார் பயன்படுத்திய நூல்கள் வழங்கும் விழா தமுஎச இயக்ககம் மற்றும் அறந்தாங்கி கிளை நூலக வாசகர் வட்டம் இணைந்து நடத்தியது. விழாவிற்கு புதுக்கோட்டை மாவட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி செயலாளர் கவிவர்மன் தலைமை வகித்தார். அறந்தாங்கி தமுஎகச கிளை தலைவர் கான்அப்துல் கபார் கான், செயலாளர் கவிகார்த்திக் மற்றும் வாசகர்கள் வட்ட தலைவர் திருநாவுக்கரசு, பொருளாளர் வெங்கட்ரமணி உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். விழாவில் ரூ.1000 செலுத்தி 5 பேர் புரவலராக சேர்ந்தனர். ஐடியல் பள்ளி தாளாளர் மற்றும் மாணவர்கள் 150 பேர் நூலகத்தில் உறுப்பினராக இணைந்தனர். கவிஞர் ஜூ.வி, சிறப்புரையாற்றினார். நிகழ்ச்சியில் வாசகர்கள், கவிஞர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அறந்தாங்கி கிளை நூலகர் கார்த்திகேயன் வரவேற்றார். ரேவதி நந்தகுமார் நன்றி கூறினார்.

Related Stories: