சீர்காழி, நவ.20:சீர்காழி சுற்றுவட்டார பகுதிகளில் நெற்பயிர்களில் இலை சுருட்டுப்புழு தாக்குதலை தடுக்க மருந்து தெளிப்பு பணியில் விவசாயிகள் தீவிரம் காட்டி வருகின்றனர்.சீர்காழி சுற்றுவட்டார பகுதிகளான வைத்தீஸ்வரன்கோயில், கதிராமங்கலம், எடக்குடி, வடபாதி, தென்னலக்குடி, காத்திருப்பு, அல்லி விளாகம், நாங்கூர், திருவெண்காடு, நெய்தவாசல், கீழ சட்டநாதபுரம், காவளம்பாடி, திருவாலி கீழச் சாலை, புதுத்துறை, நெப்பத்தூர், திருநகரி, ஆதமங்கலம், பெருமங்கலம், கொண்டல், ஆதமங்கலம், வள்ளுவக்குடி, அகணி, நிம்மேலி உள்ளிட்ட பகுதிகளில் விவசாயிகள் சுமார் 20 ஆயிரம் ஏக்கரில் சம்பா சாகுபடி பணியில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர். தற்போது நெற்பயிர்கள் நன்கு வளர்ந்து காணப்படுகிறது கடந்த சில நாட்களாக மழை விட்டிருந்த நிலையில் விவசாயிகள் களையெடுக்கும் பணியிலும் அடி உரம் மேலுரம் இடும் பணியிலும் தீவிரம் காட்டி வருகின்றனர். இதனிடையில் பெரும்பாலான இடங்களில் நெற்பயிர்களில் இலை சுருட்டு புழு அதிக அளவில் நெற்பயிர்களை தாக்கி வருகின்றன. இதனை அறிந்த விவசாயிகள் பூச்சி மருந்து தெளிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றன.