திருப்புவனம் நவ.20: திருப்புவனம் வட்டாரத்தில் உள்ள விவசாயிகளுக்கு ஆழ்துளை கிணறு, ஆயில் இஞ்சின், நுண்ணீர் பாசனம் போன்றவை அமைக்க தோட்டக்கலை துறை மூலம் மானியம் வழங்கப்படுவதாக தோட்டக்கலை துறை உதவி இயக்குநர் தெரிவித்துள்ளார்.தோட்டக்கலை துறை உதவி இயக்குநர் பாண்டியராஜன் கூறியிருப்பதாவது: திருப்புவனம் வட்டாரத்தில் நுண்ணீர் பாசனத் திட்டத்தை ஊக்குவிப்பதற்காக விவசாயிகளுக்கு ஆழ்துளை கிணறு அமைக்க ரூ.25 ஆயிரமும், மின் மோட்டார் அல்லது ஆயில் இஞ்சின் கொள்முதல் செய்வதற்கு ரூ.15 ஆயிரமும் 130 க.மீ தண்ணீர் தொட்டி அமைக்க ரூ.40 ஆயிரமும் கூடுதலாக மானியம் வழங்கப்படுகிறது.