வேலூர், நவ.20:பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வேலூர் மாவட்டத்தில் ரேஷன் அட்டைதாரர்களுக்கு வழங்குவதற்காக இலவச வேட்டி சேலை தாலுகா அலுவலகங்களுக்கு சப்ளை செய்யப்பட்டு வருகிறது.தமிழகத்தில் ஏழை எளிய மக்கள் பயன்பெறும் வகையில் ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகை முன்னிட்டு ரேஷன் கார்டுதாரர்களுக்கு தமிழக அரசின் இலவச வேட்டி, சேலைகள் வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி, அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 14ம் தேதி பொங்கல் பண்டிகை வருவதையொட்டி ரேஷன் கார்டுதாரர்களுக்கு இலவச வேட்டி, சேலை வழங்க தமிழகம் முழுவதும் முழுவீச்சில் பணிகள் நடந்து வருகிறது.இதற்காக வேலூர் மாவட்டத்தில் 13 தாலுகாக்களுக்கு கோ ஆப்டெக்ஸ் நிறுவனத்தில் இருந்து இலவச வேட்டி சேலை சப்ளை செய்யப்பட்டு வருகிறது. இதுகுறித்து சமூக பாதுகாப்பு திட்ட அலுவலர்கள் கூறியதாவது: