ஜெயங்கொண்டம், நவ.19: ஜெயங்கொண்டம் அருகே டாஸ்மாக் சூப்பர்வைசர் வீட்டில் கொள்ளையடித்–்த 2 பேரை போலீசார் கைது செய்தனர். அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள கல்லாத்தூர் வட வீக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் ராமச்சந்திரன் (45).இவர் கடலூர் மாவட்டம் முஷ்ணம் டாஸ்மாக் கடையில் சூப்பர்வைசராக பணி புரிந்து வருகிறார். இவர் வழக்கம் போல் கடந்த அக்டோபர் 3ம் தேதி பணிக்கு சென்றுவிட்டார். இவரது மனைவி கீதா குணமங்கலம் கிராமத்தின் அருகே உள்ள மதகளிர் மாணிக்கம் என்ற கிராமத்தில் உறவினர் வீட்டு துக்க நிகழ்ச்சிக்கு சென்று மீண்டும் மாலை வந்து பார்த்த போது முன்பக்க கதவுகள் திறந்த நிலையில் கிடந்துள்ளது. உள்ளே சென்று பார்த்தபோது மர்ம நபர்கள் பீரோவை உடைத்து அதில் இருந்த 36 பவுன் நகைகள் ரூ ரூ.30 ஆயிரம், 5 ஜோடி கொலுசுகள் உள்ளிட்ட வெள்ளி பொருட்கள் ஆகியவை கொள்ளையடித்து சென்றது தெரிய வந்தது.