நாச்சியார்பேட்டை ரயில்வேகேட் நாளை மூடல்

விருத்தாசலம், நவ.19: விருத்தாசலம் ரயில் நிலையம் அருகே நாச்சியார்பேட்டையில் உள்ள ரயில்வே கேட் மாதாந்திர பராமரிப்பு பணிக்காக நாளை (20ம் தேதி) மூடப்படுகிறது. காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை நாச்சியார்பேட்டையிலிருந்து

எருமனூர் செல்லும் சாலை போக்குவரத்து தடை செய்யப்படுகிறது. அப்பகுதியில் செல்லும் வாகனங்கள் மற்றும் பொதுமக்கள் மாற்று வழியில் செல்ல வேண்டும் என விருத்தாசலம் ரயில்வே நிலைய மேலாளர் ஜெகதீசன் தெரிவித்துள்ளார்.

Related Stories: