கல்லூரி மாணவர் தூக்கிட்டு தற்கொலை

சிதம்பரம், நவ. 19: சிதம்பரம் அண்ணா

மலைநகர் போலீஸ் சரகத்துக்கு உட்பட்ட தோப்பு தெருவை சேர்ந்தவர் கார்த்திகேயன் மகன் சிவபாலன் (20). இவர் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் பொறியியல் மெக்கானிக்கல் பிரிவில் 3ம் ஆண்டு படித்து வருகிறார். இந்நிலையில் சிவபாலனின் பெற்றோர் கடந்த 6ம் தேதி ஆன்மீக சுற்றுலா சென்றனர். நேற்று மதியம் அவர்கள் வீட்டுக்கு வந்து பார்த்த போது அறையில் இருந்த மின்விசிறியில் துண்டால் சிவபாலன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இதுகுறித்து சிவபாலனின் பெற்றோர் அண்ணாமலைநகர் காவல்நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். சப்-இன்ஸ்பெக்டர் கணபதி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று சிவபாலன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சிவபாலன் எதற்காக தற்கொலை செய்து கொண்டார் என்ற விவரம் தெரியவில்லை. இதுதொடர்பாக அண்ணாமலைநகர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: