மூணாறு, நவ.19: மூணாறு அருகே சின்னக்கானல் பகுதியில் பெய்த கனமழை காரணமாக மண்சரிவு ஏற்பட்டதில் விவசாய நிலங்கள் சேதம்டைந்தது. தொழிலாளியின் வீடும் இடிந்தது. மூணாறு அருகே உள்ள சின்னக்கானல் பகுதியில் நேற்று முன்தினம் கனமழை பெய்தது. இதனால் பழங்குடி மக்கள் குடியிருப்பான செண்பகதோளுவில் மண்சரிவு ஏற்பட்டது. மாலை 6 மணி முதல் இரவு 11 மணிவரை வீடாது பெய்த கனமழை காரணமாக இப்பகுதியைச் சேர்ந்த சிவன் என்பவரது வீடு இடிந்தது. மற்றொரு வீட்டின் அறையில் சிவன் மற்றும் அவரது மனைவி வீரலட்சுமி தூங்கிக் கொண்டிருந்ததால் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர்.