வருசநாடு, நவ.12:கடமலைக்குண்டு அருகே இலவச வீட்டுமனை பட்டா வழங்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.கடமலைக்குண்டு அருகே டாணா தோட்டம் கிராமத்தில் சுமார் 50க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளது. இங்கு கடந்த 50 ஆண்டுகாலமாக இங்கு வசிக்கும் பொதுமக்களுக்கு அடிப்படை வசதிகளான சாலை வசதி, குடிநீர் வசதி, மின்சார வசதி இவை அனைத்தும் பாதிப்படைந்த நிலையில் உள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் சில மாதங்களாக இலவச வீட்டு மனை பட்டா வேண்டி வட்டாட்சியர் அலுவலகத்திலும், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்திருந்தனர். இந்த மனுவினை தொடர்ந்து அதிகாரிகள் சில தினங்களுக்கு முன்பு வந்து ஆய்வு பணியை மேற்கொண்டனர்.